பேராசை காற்று நிரப்பிய பலூன்

உள்ளத்தில் ரசனைகள் உள்ளவரை
உலகத்தின் துயர்களால் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது
உள்ளம் என்பது ஆமையின் உடல் போல மென்மையானது
குளிர்,சூடு தாங்காது
அதற்கு ஒரு ஓடு வேண்டும்
மனித மனம் என்பது தோல் இல்லாத பல்லி,
ஒரு துயரத்தை தாங்காது
ஒரு சொல்லைத் தாங்காது
தான் நினைத்தது எல்லாம்
     நினத்த உடன்
     நினைத்த படியே
நடக்க வேண்டும் என்ற பேராசை காற்று நிரப்பிய பலூன்
      சிறு ஊசி பட்டாலும் காற்றுப் போய் சுருங்கி விடும்
   தொட்டாற் சுருங்கியான குழந்தை அது
   அதை சமாதனப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல‌
திட,திரவ,வாயு என‌
    அதை அழவிடாமல் தூங்க வைக்க‌
    அதை ஏங்க விடாமல் தாங்கிக் கொள்ள‌
மனிதன் கண்டு பிடித்தது ஏராளம்,அதனால் விளைந்த துயர்களும் ஏராளம்
ஆனால் அழகு,அன்பு,இசை,இயற்கை,மனிதநேயம்
எனும் பண்புள்ள பாதுகாப்பான ரசனைகள்

 

கவசங்களாக உள்ளவரை இந்தத் துயரங்களால் நம்மை தொடமுடியாது

துணைவி

மணைக்கேற்ப மாண்புடையளாகி தான்

துணைக்கேற்ப வளமுடையளாகி வாழ்வது துணைவி
இல்லத்தில் உள்ளவன் குணம் இல்லாதவன் ஆனால் பின்னே
உலகத்தில் உள்ளவர் பணம் எல்லாமிருந்தும் பயனென்ன
இல்லத்தில் உள்ளவன் இனியவனானால் இல்லாதது எதுவுமில்லை
உள்ளத்தில் வந்தவன் இன்னலானால் உள்ளதென்று ஒன்றுமில்லை
கற்பு எனும் நெருப்பு இருந்தால்
 பெண்ணை விட பெரிய பொன்னில்லை
அற்பம் எனும் நெருப்பு வளர்த்தால்
பெண்ணை விட துயர புண்ணில்லை
கடவுளென்றே கணவனைத் தொழுவாள்
 பெய்யென்றால் மழை பெய்யுமே
தன்னை காத்து தன் கணவன் உயிர் காத்து
தன் சொல் காத்து தன் சுற்றம் காத்து சோர்வு இலாதவள் பெண்
சிறையின் காவலால் என்ன பயன் மகளிர் தம் நாணமெனும்
நிறையின் காவலால் கற்பு காக்க படுமே தன் மானமென்றும்
 நல்ல கணவரைப் பெறும் பேறு பெற்ற பெண்ணே
தேவர் வாழுமுலகில் வாழுப் பேறு பெற்ற பெண்டிரே
தன்னை இகழ்பவர் பெறும் முன் ஏறு போல பீடுடைய நடை
தன் இல்லத்திலே நல் புகழுடையாள் இல்லாதவர்க்கு இல்லை
தன் மனையில் உள்ளவன் மான்பே
 வாழ்வுக்கு மங்கலமாகும்
தன் மக்களை பெற்றவள் மாண்பே  
அழகுக்கு அணிகலமாகும்

குறள் நெறி இல்லறம்

பெற்றவர்க்கும் பெற்றோர்க்கும் துணை

உற்றோருக்கும் துணைவனே துணை
துறந்தவர்க்கும் இரந்தவர்க்கும்   கை
இரந்தவர்க்கும் தலைவனே துணை
இல்லத்தை சுற்றத்தை தெய்வம் தெளிந்தவரை காப்பது கடமை
பழி தவிர்த்து செல்வம் சேர்த்த வாழ்வு விழி என்றும் தவறுவது இல்லை
அன்பும் அறனும் உடைய இல்லமே பண்பும் பயனுமாகும்
அறம் மாறாத இல்லற வாழ்வு மலர்ந்தால் துறவறம் எதற்கு
அறம் வழவாத இல்லற வாழ்வு ஆற்றுவதே துறவிலும் தூய்மையே
இயல்பான இல்லறம் வாழ்பவன் முயல்வாருள் எல்லாம் தலைவனே
அறம் என்று வாழ்வது ஒன்றே இல்லற வாழ்வு
பிறர் ஒன்று பழிப்பது இன்றேல் அதனிலும் நன்று
வையகத்துள் நல்லவனாக வாழ்பவன்
தெய்வத்துள் வானகத்தில் வணங்கப்படுவான்

குறள் நெறி அறம்

சிறப்பு தரும் செல்வம் தரும்
உயிர்க்கு அறம் செய்பவனுக்கு
அறிவு தரும் ஆக்கம் தரும்
உயிரிடம் கருணை வைப்பவர்க்கு
அறத்தினும் சிறந்த ஆக்கம் புகழ் பிறிதொன்றில்லை
மறத்தலின்இழிந்த அழிவும் கேடும் வேறின்றில்லை
செல்லும் இடமெல்லாம் தானமும் தர்மமும் செய்வாயே
முடியும் வகையெல்லாம் ஈகையும் இனிமையும்  மறவாதே
மனத்தின் ஆழத்தில் மாசு இல்லாதவனே அறத்தின் அரசன்
குணத்தின் விழியில் தூசு இல்லாதவனே தர்மத்தின் தலைவன்
ஆசை வெகுளி கடுஞ்சொல் பொறாமை நீக்குவதே அறம்
பிறகு செய்வோமென்று என்னாது இன்று அறம் செய்க 
இன்று வந்தேனென்று காலன்வர நல்ல துணையாகுமே
பல்லாக்கு மேல் ஒருவன் கீழ் ஒருவன் ஆனது பணத்தாலே
புகழுக்கு மேல் ஒருவன் கீழ் ஒருவன் ஆவது குணத்தாலே
அறத்தினால் வருவதே பேரின்பம்
மற்றதெல்லாம் புகழில்லாத புழுதியே
வீழும் நாளெல்லாம் வீணாகாது நன்மை செய்வதே
வாழும் நாளெல்லாம் துயர் வழி அடைக்கும் கதவாகும்
செய்ய வேண்டியது எல்லாம் அறமே
தவிர்க்க வேண்டியது எப்போதும் தவறே.

குறள் நெறி நன்றி

நாம் ஏதும் செய்யலாம் நமக்கு உதவியவர்க்கு
வையகத்தையும் வானகத்தையும் தந்தாலும்  ஈடாகாது 
காலத்தினால் செய்த உதவி சிறிதே என்றாலும்
ஞாலத்தை விட பெரிது அந்த நன்றி என்பார் பெரியோரே
பயன் கருதாது ஒருவர் செய்த உதவியை 
நினைத்து பார்த்தால் அதன் நன்மை கடலை விட பெரிதே
தினையளவே உதவி செய்தவரையும் அறிவுற்றவர்
பனையளவாகக் கொண்டு நன்றி செய்வார் பயனுற்றவர் 
உதவியின் பயனை அளந்து பார்த்தால் அது
உதவி பெற்றவரின் பண்பை போல வளரும் தன்மையுடையது
                        
மாசு இல்லாதவர் நட்பை என்றும் மறவாதே
துன்பம் வரும் போதும் தூயவர் நட்பை 
பிரியாதே
துயருற்ற போது வந்து துன்பம் துடைத்தவர் நட்பை
என்றென்றும் ஏழபிறவியிலும் எந்நாளும் நினைப்பாரே
                                                                        
நன்றியை மறப்பதும் நல்லதல்ல
நன்றியை  மறந்தவரை நினைப்பதும் நல்லதல்ல
கொலை போல ஒருவர் கொடுமை செய்தாலும்
இலை போல ஒரு சிரிய நன்மை செய்தரென்றால் மன்னிக்கப்படுவாரே
எந்த நன்றியை கொன்றவர்க்கும் மன்னிப்பு உண்டு 
செய்த நன்றியை கொன்ற கயவருக்கு கருணையேது

குறள் நெறி பொறாமை

நெஞ்சத்து பொறாமை இல்லாத பண்பே
உலகத்து ஒழுக்கமென ஒருவன் கொள்ள வேண்டும்
எவரிடத்தும் பொறாமை இல்லாத குணமிருந்தால்
அதைவிட பெருஞ் செல்வம் பிறிதொன்றில்லை
பிறர் செல்வம் கண்டு பொறாமையில்லாதவனுக்கு
பிற அறமும் ஆக்கமும் தேவையில்லை
இழிந்த தீமை படுத்தும் பாடு அறிந்தவர்
ஒருபோதும் 
பொறாமையினால் வரும் தீமையை செய்ய மாட்டார்
                                                     
பொறாமை உடையவர்க்கு அது ஒன்று போதும்
பிற பகை எதுவும் வழக்கும் கேட்டிற்கு
கொடுத்தது உதவுவதை தடுத்து நிறுத்தும் பொறாமையுடையவன்
சுற்றமும் உடுப்பதும் உண்ணவும் ஏதுமின்றி கொடுப்பான்
பொங்கும் பொறாமை உடையவனை விட்டு
தங்கும் செல்வமும் தங்காது போகும்
பொறாமை என்றொரு பொல்லாத பாவி
திருவை அழித்து தீயவழி விட்டு விடும்
பொறாமை பொங்கும் நெஞ்சமுடையவன்
செல்வமும் கேடே என்று நினைக்கப்படும்
பொறாமையினால் உயர்ந்து வாழ்ந்தவர் இல்லை
பொறாமையில்லாதாவர் ஒருபோதும்
தாழ்ந்ததும் இல்லை

குறள் நெறி நடு நிலை

நியாயமாக சேர்த்த ஒருவர் பொருளை

நியாயம் இல்லாது ஒருவன் விரும்புவது குற்றமாகும்
பயன் விரும்பி பழியாகும் செயல் செய்யமாட்டார் 
நடு நிலையை மீறி அநியாயமாக செய்ய நாணம் உடையார்
பேரின்பம் பெற வேண்டும் என விருப்பம் உள்ளவர்
சிற்றின்பம் விரும்பி அறன் அல்லாத செயல் செய்யமாட்டார்
தன் புலன்களை வென்ற தெளிவான காட்சி உடையவர்
இல்லை என ஏங்கி இன்னல் செய்ய மாட்டார்
அருள் விரும்பி நல் வழியில் நின்று வாழ்பவன்
பொருள் விரும்பி பொல்லாதது செய்தால் வீழ்வான்
பிறர் பொருளை விரும்பி கவர வேண்டாம்
அதனால் விளையும் பயன் தீமையாகும் முடியும்
நம்செல்வம் குறையாமல் இருக்க நாம் விரும்பினால்
பிறர் செல்வம் விரும்பாமல் இருக்க பழக வேண்டும்
அறன் அறிந்து பிறர் பொருள் விரும்பாத அறிவுடையாரை
திறன் அறிந்து அவர் பொருள் சேர்ப்பாள் திருமகளே
தவறு என்று எண்ணாது பிறர் பொருள் விரும்பினால் 
வெற்றி என்றும் சேராது வேண்டாமே அந்த செருக்கு

குறள் நெறி நீதி

திருக்குறள்
நீதி வழி நின்று நிலை மாறாது நடந்தால்
நல் தகுதி என்பது அது ஒன்றே போதுமே
செம்மையான நீதி உடையவன் செல்வம் சிதைவு இன்றி
எக்காலத்திலும் ஏழுதலைமுறைக்கும் உதவும்
நீதி தவறினால் வரும் செல்வம் நல்லதல்ல
நெறி தவறிய செல்வத்தை கை விடுவதே நல்லது
தகுதியானவர் இவர் தகுதியில்லாதவர் அவர் என்பது
அவரவர் நீதியால் நிலைநிறுத்தப்படும்
                            
வறுமையும் செல்வமும் ஒரு பொருட்டல்ல
நெஞ்சுக்கு நீதி தவறாமை சான்றோர்க்கு அழகாகும்
நெஞ்சு நீதி நிலையில்லாதது செய்தால்
கெடுவதற்கு நேசம் இளைவிட்டது என்றறிக
நடுநிலையாளன் நன்றியுடையவன் வாழ்வின் தாழ்வும் 
கெட்டதாக வையாது இவ்வுலகம்
சமமாக சீர்தூக்கி பார்க்கும் தராசு முள் போல
எவர்பாலும் சாயாது நீதி சொல்வது சான்றோர்க்கு அழகு
உள்ளம் ஒரு பக்கம் சாயாது எப்போதும்
இருந்தால்
சொல்லும் எப்போதும் செம்மை உடையதுதானே
பிறர் பொருளையும் பிறரையும் தன்னுயிர் போல எண்ணி
அறம் தவறாது வாணிகம் செய்வார் சிறந்து வாழ்வார்

JAN 3

ஒஇறைவா
உம்மைதேடலில்இந்தஉலகம்
தன்அறிவைஇழந்துவிட்டது
ஒருவனேதேவன்.
பத்துவிதிகள்
ஒன்பதுமேடைகள்
எட்டுசுவர்க்கங்கள்
ஏழுதளங்கள்
ஆறுகாரணங்கள்
ஜந்துபுலன்கள்
நான்குகருத்துக்கள்
மூன்றுஆன்மாக்கன்
இரண்டுஉலகங்கன்
ஒரேஆண்டவன்

                  உமர் கயாம்.

JAN 2

பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்
தன்னின் மறைந்தது தன்கர ணங்களே.

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தை மறைந்தது பார்முதல் பூதமே. 

006 quotes FROM PURA NANOORU

நுண்ணார் நாண அண்ணாந்து நடந்து இனிது வாழ்பவர் அறிஞர்
மண் ஆறும் அரசன் போல செம்மலும் உடையபர் கவிஞர்

 நீ நடந்த இடம் எல்லாம் மென் மலர் பூக்கும் உன் புகழாலே
நீ சிவந்து நோக்கும் இடம் எல்லாம் தீ எரியும் உன் வீரத்தாலே

காலனும் காலம்  பார்க்கும் பார்க்காது
வேலவன் காலன் தாக்கும் உன் வீரமே

நின் யானையும் மலையின் தோற்றம்
நின் தானையின் கடலென முழங்கும்
புலி காக்கும் குட்டி போல
குடி காப்பது அரசு கடமை

அங்கு மழை உறை வேண்டும் போது பெய்யும் மழை போல 
இங்கு ஏழை முறை வேண்டும் போது ஈயும் அறம் வேண்டும்

MAY 11 2016

அறம் அது மிருகத்தை மனிதமாக்கும் எண்ணமும் செயலும்…
அது அவரவர்க்கு இயன்ற வரையில் முயற்சி செய்கிறார்கள்.
  
அவரவர் குணநல சுபாவங்கள் மற்றும் குடும்ப ரீதியான 
தாக்கங்களால் இது செயல்படுகிறது.
   
ஆகக் குறைந்த பட்சமாக கணவன் மணைவி, குழந்தைகள்        
உழைப்பு, சேமிப்பு குழந்தைகளின் எதிர்கால வாழ்வு என்ற என்ற சிறிய
வட்டத்தில் சுழலும் அடிப்படை வளையம் குடும்பம்.

99.99. சதவீத

மக்கள்  பிறவிகளின் இயல்பான வாழ்வு இல்லறம்.
     
     
இயலும் போதெல்லாம் மற்ற அறப்பிரிவுகளில் வாழ்பவர்களுக்கு
தனது இல்லறத்தில் இருந்து பிறழாமல்
சேவை செய்கிறார்கள் இவர்கள்.

MAY 10 2016

புதிதாக வந்த நோயாளியின் அறைக்குள் நுழைந்தார் மனநல மருத்துவர்…..
உனக்கு என்ன பிரச்சனை என்றார்?  
அப்பா என்னை டாக்டருக்கு படிக்கச் சொன்னார்…
அம்மா என்னை எஞ்சினியர் ஆகச் சொன்னார்
அண்ணன் என்னை பைலட் ஆகச் சொன்னார்
அக்கா என்னை பிஸினஸ் செய்யச் சொன்னார்
நண்பன் என்னை அரசியலில் சேரச் சொன்னார்
ஆளாளுக்கு ஏதாவது ஆகச் சொன்னார்கள்
இங்கு நிம்மதி,யாரும் என்னை எதுவாகவும் ஆகச் சொல்லவில்லை
அது சரி
நீங்கள் யார், உன்னை என்னவாகச் சொன்னார்கள்? என்று கேட்டார்
பயத்துடன் டாக்டர், நான் மனநலமருத்துவர் என்றார்…
ஓ நீங்கள் அந்த பைத்யகார உலகத்தில் வாழ்பவரா?
என்றார் அந்த நோயாளி
     ஆக்கம் தந்தது கிப்ரான்…

MAY 8 2016

வாழ்வு  மலர் போல
                     சிரித்து மகிழ்ந்து
                      மலர்ந்து மணம் வீசி
                      காதலித்து கருத்தரித்து    
                      அழகான  வாழ்வு
 
ஒரு விதைக்கும்
மறு  விதைக்கும்  நடுவே
ஆனந்தமான   அந்த மலரே
          ஆண்டவன் தந்த பரிசு….
 
மலருக்காக தியாகம் செய்ய
        விதைகள் மறுத்ததுமில்லை
                          மறந்ததுமில்லை
தியாகம் செய்த விதைகளின் வீரத்தை
      மலர்கள் மறந்ததுமில்லை மறுத்ததுமில்லை
அதற்கு மலர்கள் விதைகளை 
           உற்பத்தி செய்வதுதான் சரியான சாட்சி….
 வாழ்வென்பது
           அதிட்டமா  துரதிட்டமா
           வரமா  சாபமா
சிலர்  ஒருமலருக்கும்  மறுமலருக்கும்
நடுவே  விதையாகப்  பிறக்கிறார் .
       அழகான தாயான மலரின் வாழ்வுக்கும்
    அழகான மகளான மலரின் வாழ்வுக்காவும் 
     பாலமாக  இருக்கிறார்
பறந்து, விழுந்து , வரண்டு, காய்ந்து
இளைத்து மெலிந்து, நிலத்தில் புதைத்து
நீரினில்  கரைந்து
செழித்து வளரும் அந்த விதைதான்
                           அன்னை,
                            அவள்தான்  ஆண்டவன்

MAY 9 2016

ஒரு பக்கம் 
      செல்வம் மனிதனை மிருகத்திலும் இழிவாக கீழே இறக்கியது
மற்றொரு பக்கம் 
   கல்வி மானுடத்தை இறைவனின் நிலைக்கு மேலே உயர்த்தியது
 
இந்த இருவேறுபட்ட காந்த சக்திகள் 
   இருபக்கமும் நேரெதிராக    இழுக்கின்றன.
தெய்வீக குணங்கள் அதிகமாக அதிகமாக
    மனிதனை மேம்படுத்துகின்றன
அப்படிப்பட்ட மானுடர்கள்  நிறைந்த 
    குடும்பங்கள், குழுக்கள் தேசங்கள்
மகிழ்வோடு மன நிறைவோடு வாழ்கின்றன
மிருக குணங்கள் நிறைந்த மானுடர்கள்     
பேராசை , போட்டி , பொறாமை , கபடு , சூது போன்ற
கீழ்த்தரமுள்ள மானுடராக மாறிவிடுகின்றார்கள்
அவர்களால் நிறைந்த இடங்கள்
சத்தம், யுத்தம் , ரத்தம் என சிந்தி சிதறி சிதைக்கின்றன
 மனிதன் என்பவன் 
      வலது/இடது பக்கம் என்று இருபக்கம் உள்ளவன்
 மேற்பார்வைக்கு,
ஆனால் ஊடுருவிப் பார்த்தான் 
      உடல் / மனம் என இருவேறு பாகங்கள் உள்ளவன்
இவை இரண்டின் தேவைகள்
       நேர் மாறனவை
மனம் என்பதை ஆன்மா என ஆன்றோர்கள்.
 
உடலுக்கு உடலின் தேவைகளுக்கு
மனி, செல்வம் ,பொருள் அத்தியாவசயமாகிறது
உணவு, உறக்கம் , உறைவிடம் , உறவு
என்பது மானுடப்பரிமை வளர்ச்சியின்
     மிகவும் கிடைக்காத பொருளாகி விட்டது..
 
பூமி என்பது இறைவனின் சமையல் கூடம்
இங்கே பிறக்கின்ற அத்துனை சீவன்களுக்கும் உணவு உண்டு.
 
ஒரே ஒரு நாள் வாழும் 
      மலரின் புகழ்
ஒரு நூறு ஆண்டு வாழ்ந்த
      மனிதனுக்கு இல்லையே
 
இறக்கத்தானே பிறந்தோம்
அதுவரை 
இரக்கத்தோடு வாழ்வோம் 
 
பிறக்கும் போது 
       கையை மூடிக் கொண்டே பிறந்தான்
கையை மூடிக் கொண்டே பிறந்தான்
இறக்கும் போது 
கையை திறந்து வைத்தே இறந்தான் 
 
மானுடன் இவன்
இறைவன் கொடுத்தனுப்பிய செய்தி ஒன்றை
இங்கே விட்டுச் சென்றான்.

நீ இங்கே இருந்து 
       எதையும் எடுத்துச் செல்ல முடியாது
 
ஆனால் இறைவன் 
           கொடுத்தனுப்பிய ,
அன்பை விதைப்போம் 
ஆனந்தத்தை வளர்ப்போம் 
கருணையை பரப்புவோம் .
 
இறந்தாலும் நாம் வாழ முடியும் 
                 நினனவுகளாக
நிழலாக மாறி புகைப்படத்தில் உறைந்தாலும்
        வாசம் வீச முடியும் 
         நல்ல வாசகங்களைத் தந்து போனால்…
மறக்க முடியாத மானுடனாக வாழ்ந்து வைப்போம் 
மலர்கள் போல, மறைந்தாலும்        
நினைவிலே இனிப்போம்…

005 QUOTES from PURANANOORU

செஞ் ஞாயிறும் நிலவாக செய்யும் உன் கருணையே
வெண் திங்களும் வெயில் உன் வீரத்தாலே

பகைவர்க்கு ஞாயிறு போல சினம் தருவான்
இரப்பவர்க்கு திங்கள் போல குளிர் ஆனவன்

மெண்மையின் மகளிர்க்கு வணங்கு நீ
வன்மையின் ஆடவர்க்கு அணங்கு நீ

MAY 7 2016

பிறர் சங்கடத்தில் இருக்கும்போது
நாம் பிரமாதமான யோசனைகள் சொல்கிறோம்
அதே சங்கடத்தில் நமக்கு வரும் போது
நாம் அவ்வளவு புத்திசாலியாக இருப்பதில்லை…
வாழ்க்கை முழுக்க ஒரு பெரிய நாடகம்
மேடை பிரம்மாண்டமானது
ஆனாலும் அது நாடகம்தான்
என்ன நடக்கிறதோ
 அது நாடகத்தில் நடக்கிறது
நாம் ஒரு சாட்சி 
சம்பந்தப்படாமல் இருந்து விட்டால்
சற்றே தூரத்தில் இருந்து பார்த்தால்
மனம் குழப்பமடையாது
மனம் தெளிவாக இருக்கும்

குறள் நெறி புறம்

அறம் செய்யாதவன் என்றாலும் ஒருவன்
புறம் சொல்லாதவன் என்றால் இனிது
 
அறம் அல்லாத செய்வதை விட தீது
புறம் சொல்லி பொய்த்து பிறரை நகைப்பது
 
புறம் கூறி நடித்து பொய்த்து வாழ்வதை விட
சாதல் நல்லது என்பது அறம் கூறும் ஆக்கமே
 
கண்ணுக்கு நேர் நின்று தவறாக சொன்னாலும் தவறில்லை
முன் போக விட்டு பின் நின்று தவறாக பேசாதே
 
அறம் கனிந்த நெஞ்சம் இல்லாதவன் என்பது
புறம் சொல்லும் அவனது இழி  பண்பால் அறியப்படுமே
பிறரைப் பழி சொல்லும் பாதகன் தனக்கே
பிறர் பழி சொல்ல பாதை போடுகிறான்
 
புறம் சொல்லி உறவுகளை பிரிப்பார்
நகைச்சுவையாக செல்லி நட்புகளை  வளர்க்கத்தெரியாதவர்
 
உயிர் நண்பரையே குற்றம் சொல்லி தூற்றும் மரபுள்ளவர்
அயல் வாழ்பவரை என்ன பாடு படுத்துவாரோ 
 
புறம் கூறி புண்ணான சொல் உடைய புழு உடைய 
அறம் என்று இந்த உலகம் ஏன்தான் தூக்கிதிரிகிறதோ
 
பிறர் குற்றம் போல தம் காணப்பழகினால்
துயர் இல்லையே இந்த மண்ணில் வாழும் உயிர்களுக்கு

குறள் நெறி துறவு

ஆசை துறந்தவர் ஒழுக்கத்தை அறிவு நூல் பெருமை பேசும்

அறிவு இழந்தவர் பழக்கத்தை அற நூல் கயமையென ஏசும்
இறந்தவரை கணக்கிடலாம் துறந்தவர்
பெருமை கணக்கிடலாங்காது
பிறந்தவரை அளவிடலாம் சிறந்தவர்
 அருமை அளவிடலாகாது
இம்மையின் பாவம் களைந்து
அறம் தேர்ந்தவர் உலகுக்கு பெருமை
மறுமைக்கு லாபம் நினைந்து
கருனை சேர்ந்தவர்  உலகுக்கு அருமை
மன உறுதியென்ற அடக்கத்தால்
 புலன்களை காப்பவன் வென்றவன் அறிஞன்
அய்ம்புலனடக்கியவன் ஆற்றலுக்கு தேவர் தலைவனும் ஈடாகமாட்டார்
அய்ம்பொறியடக்கியவன் அறிவுக்கு தேவர் தேவனும் ஈடாக மாட்டான்
செய்வதற்கும் அரிய செயல்களை செய்ய முடிந்தவர் பெரியவர்
செய்வதற்கு எளிய செயல்களையும் செய்ய இயலாதவர் சிறியவர்
அய்ந்து புலன் வகை தெரிந்து அடக்குவதே அறிவின் சிறப்பு
அய்ந்து பொறி தீயை புரிந்து அடக்குபவனே உலகின் காப்பு
மொழி பேசும் மறையே மனிதர் மனிதன் நிறைய குணம் காட்டும்
வாய் பேசும் குறையே கயவர் மனதின் குறை குணம் காட்டும்
குணம் என்ற குன்றில் புகழ் ஓங்கி நின்றவர் வெகுளி அரிது
மனம் என்ற மன்றில் குணம் ஒதுங்கி நின்றவர் குற்றம் அரிது
                  
அறம் என்பது எவ்வுயிர்க்கும் அன்பு காட்டி அணைப்பதுவே
துறவு என்பது உலகுயிர்க்கும் அறிவு காட்டி நடத்துவதே

MAY 6 2016

ஷேக்ஸ்பியர்

நெடிய கொடிய வாழ்விலே
நம்மை நீடிக்க வைப்பதெது
கொடிய மனிதரின் கொடுமையை
பொறுக்க வைப்பதெது

அகந்தை மனிதர் செய்யும்
அவமானத்தை தாங்க வைப்பதெது
புறக்கணித்த காதலால்
புண்பட்ட மனத்தை காப்பது எது

அதிகார வர்க்கத்தின்
ஆணவ காயங்களை ஆற்றுவது எது
தகுதி வாய்ந்தவரின்
பொறுமையை தூக்கி நிற்பது எது

தகுதியற்றவரின் பெருமைகளை
சகிக்க வைப்பது எது
காலமெனும் கைப்பிடி
சவுக்கடியை ஏற்க வைப்பது எது

வீழ்ச்சிகளும் தாழ்ச்சிகளும் செய்த
காயத்தை தாங்குவ‌து எது
தற்கொலைக்கு போகாமல்
மனிதரை தடுத்து நிற்பது எது

MAY 12 2016

Thank you dinamalar .our article today…..
மன உறுதிவளர்ந்தால்…
அரிவாளும் ஆசிட்டும் தேவையில்லை
அன்றாடம் செய்தி சேனல்களை பார்க்கவே பயமாக இருக்கிறது.காரணம், ரத்தக் களறியாக வரும் செய்திகளே அவற்றில் அதிகமாக வருகின்றன. குறிப்பாக பெண்களை இலக்காக வைத்து தினமும் கொலை, கொள்ளை நடக்கின்றன.
அதிலும் பல கொலைகள் குரூரமாக செய்யப்படுவதை பார்க்கும்போது பகீர் என்று இருக்கிறது. உதாரணமாக சென்னையில் மட்டுமே மே மாதம் முதல் ஜுன் வரையில் 12 படுகொலை நடந்துள்ளன
சமீப காலங்களில் இளம் பெண்களை குறிவைத்து தாக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அடிப்படையில் எங்கோதவறுகள் நடக்கின்றன?
திட்டமிட்டு கொலை செய்பவர்களின் மனச்சிதைவுக்கு காரணம் என்ன?
ஆரம்பத்திலேயே நமது குழந்தகளை எப்படி வளர்த்திருக்கிறோம்
.
இந்தக் கேள்விகளுக்கு பதிலாக, திருச்சி மனநல மருத்துவர் பாலசுப்ரமணியன் பெண்கள் மலர் வாசகியர்களுக்கு குழந்தை வளர்ப்பு குறித்து சில டிப்ஸ்கள் கொடுத்திருக்கிறார்
*குடும்பத்தாரைவிட வெளியாட்களிடம் நமது குழந்தைகள் அதிகமாக ஈடுபாட்டுடன் இருப்பதற்கு நாம்தான் முக்கியக் காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.
இளம் வயதில் ஏற்படும் (infatuation) பாலியல் ஈர்ப்பை காதல் என நம்பி மாய வலையில் இளம் வயதினர் விழுந்து விடுகின்றனர்.
இது ஒரு புறமிருக்க, சமுதாய ஒழுக்க கேடுக்களும் இதற்கு முக்கியக் காரணம்.
இன்றைய வேகமான உலகில் நம்மில் எத்தனை பேரஅ நமது குடும்பத்தாரிடமஅ மனம் விட்டு பேசிக்கொள்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள்
.
*இளம் பருவத்தில் குழந்தைகள் செய்யும் சிறிய தவறுகளை பெரிதுபடுத்தக்கூடாது. அதனை பக்குவமாக அவர்களிடம் விளக்க வேண்டுமே தவிர, கூச்சலிட்டு மற்றவர்கள் அறியும் படி செய்துவிடக் கூடாது. நாம் பிரச்சனையை குழந்தைகளிடம் சொல்லும் விதத்தில்தான் அதன் முடிவு அமையும்.
*பெற்றோர்களுக்கு குழந்தைகள் செய்யும் செய்பாடுகளில் விருப்பம் இல்லாவிட்டாலும் அதனை வெளிப்படையாக காட்டக் கூடாது.
எத்தனை பணிகள் இருந்தாலும் ஒரு வேளையாவது அனைவரும் சேர்ந்து உணவருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அலுவலகத்தில், கல்லூரிகளில் நடந்த நிகழ்ச்சிகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
* குழந்தைகள் நண்பர்கள் குறித்த விவரங்களை தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். அதற்காக சிஐடி போல அவர்களை பின் தொடர்ந்து பிரச்சனையை பூதாகரமாக்கி வீடாதீர்கள்.
*உங்கள் குழந்தைகள் கோபமாக இருந்தால் அதற்கு பதிலாக கோபத்தை வெளிக்காட்டாத்தீர்கள். கோபத்திற்கான காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
நமது மதம், குடும்பப் பெருமைகளை குழந்தைகளுக்கு தெரிவியுங்கள் அதே நேரத்தில், இது குறித்து அதிகம் பேசி அவர்களிடம் வெறுப்பை விதைத்து விடாதீர்கள்.
*குழந்தைகளுக்கு வழங்கும் சுதந்திரத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தி விடாமல் பார்த்துக்கொள்ளும் மிகப் பெரிய பொறுப்பு நமக்கு உண்டு. சில விஷயங்களுக்கு சுதந்திரம் தந்துவிட்டு அதற்குள் நீங்கள் மூக்கை நுழைக்காதீர்கள்.
*குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக்கொள்வதற்கு வெளியிலிருந்து உதவி செய்யுங்கள்.
*வாரம் அல்லது மாதம் ஒரு முறை குடும்பத்தாருடன் பார்க் , பீச் எங்காவது செல்லுங்கள். செல்லுமிடத்தை தேர்வு செய்வதற்கும் உங்கள் கருத்தை திணிக்காதீர்கள்.
*குழந்தைகள் சிறப்பாக செயல் பட வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. அதே நேரத்தில் அவர்கள் அவ்வாறு செயல்படவில்லை என்றால் கூச்சல் போட்டு பிரச்சனையை பெரிதாக்கி விடாதீர்கள். உங்கள் எதிர்பார்ப்பில் தவறில்லை. ஆனால் எதையும் அவர்கள் மீது திணிக்க நினைக்காதீர்கள்.
*குழந்தைகள் தவறு செய்தால் மன்னிக்கும் பண்பை வளர்த்துக்கொள்ளுங்கள். நாம் தவறே செய்யாமல் வானிலிருந்து நேராக குதித்து விடவில்லை என்பதை மறந்து விடாதீர்கள்.
*ஆண் குழந்தைகள் தாயிடமும், பெண் குழந்தைகள் தந்தையிடமும் அதிக பாசத்துடன் இருப்பது இயற்கையே.
*ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை அதிக கவனத்துடன் வளர்க்கவேண்டும்.
கல்லூரி செல்லும் பெண்களாக இருந்தால், அவர்களை குழந்தைகள் என்பதை விட சிறந்த நண்பர்களாக கருதி பழகுங்கள்.
பணியில் இருக்கும் பெண்களிடம் பெற்றோர்கள் அனுசரனையாக நடந்துகொள்ள வேண்டும்.
*குடும்பத்தார் குழந்தைகளிடம் அதிக ஓட்டுதலுடன் இல்லாவிட்டால்தான் அவர்கள் அவர்கள் தவறான நபர்களுடன் சிநேகிதம் கொள்ளும் நிலைமை ஏற்படும்.
*பெண் குழந்தைகளுக்கு ‘பேட் டச், குட் டச்’ என்றால் என்ன என்பதை அம்மாக்கள் தான் விளக்க வேண்டும்.
*பணம் இருந்தால்தான் வாழ்க்கையை நடத்த முடியும் என்பது உண்மைதான். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.
*இது போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதில் பத்திரிகை, ஊடகங்களுக்கும் அதிக பொறுப்பு உண்டு.
*எதனைக் கண்டும் அஞ்ச வேண்டாம். மகிழ்ச்சியோ, துன்பமோ இந்த நிலை மாறும் எனும் மன உறுதியை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையை இன்பமாக்கி கொள்ளுங்கள். இதனை செயல்படுத்த தொடங்கினால் அரிவாள்களுக்கும், ஆசிட்டுகளுக்கும் விடை கொடுக்க முடியும்.

MAY 5 2016

மனிதர்களை சமாளிப்பது எப்படி?

மனிதன் என்பவன்  ஒருவன் அல்ல அவனைச் சுற்றியுள்ள மனதர்களிடமிருந்து அவனைப் பிரித்து விட்டால்அவன் மனிதனே அல்ல.

அது இன்று கற்பனையில் கூட சாத்யமில்லை
ஒரு தீவிலே சிறை வைத்தாலும் அதை பாதுகாக்க மனிதர் தேவை

ஆளில்லா தீவிலே ஒருவனை விட்டுவிட்டால் நிச்சயம் மனம் சிதைந்துவிடுவான்

          இத்தனை புரிந்திருந்தும்
          மனிதரை மனிதர் ஏன் வெறுக்கிறார்?
    
எந்நேரமும் எரிச்சல்,கோபம்,கொலை,வன்முறை,வஞ்சம்,துரோகம் என ஏன் மனிதர் மாறிவிட்டார்
               
அனைவரும் இல்லை ஆனால்
         
இதில் ஒவ்வொருவரிடமும் ஒரு சிறு குறையாவது இருக்கிறதே?

மனிதர்களை சமாளிப்பது எப்படி?

MAY 3 2016

சமுதாயத்தை செல்லரிக்கும் கிருமிகள் பல…
வியாபாரிகளும்
கலைஞர்களும்,
வியாபாரிகளை மன்னிக்கின்றேன்
லாபம் மட்டுமே எங்கள் லட்சியம்
          எனத் தெளிவானவர்கள்
அவர்களை மன்னித்து விடலாம் 
ஆனால் கலை எனது லட்சியம் என்று 
 ஆடைகளையும் அவமானம் இல்லை
அவரிடம் 
அடுத்தது கலைஞர்கள் மற்றும் சாமியார்கள்
கலைஞர்களையும் மன்னித்து விடலாம்
விபசாரம் என்று 
தன்னை மட்டும் அவமதித்து கொள்கிறார்கள்
சாமியரோ தனது வியாபாரத்துக்கு
  கடவுளையே கேவலப்படுத்துகிறார்
இவரையும் கூட மன்னிக்கலாம்
அடுத்து மேலே உள்ள அரசியல் சூழ்ச்சியாளர்கள் மக்களை பிளவுபடுத்தி
மோத விட்டு குளிர் காயும் சுயநலம்
ஆனால் அவரையும் மன்னித்து விடலாம்
இறுதியாக விளையாட்டு என்ற பெயரில்
சுயநலம், சூது விபசாரம்,சூழ்ச்சி,சுயநலம்
நம்பிக்கைத்துரோகம் செய்யும்
போலிவீரத்தை மன்னிக்க முடியவில்லை

MAY 2 2016

பல லட்சம் ஆண்உயிரணுவிலே போட்டி போட்டு வென்ற ஒன்று பெண் உயிரணுவைச் சேர்ந்து கருவாகி உருவாகிபிறந்து வளர்ந்து இறந்து மறைந்து போகும்முன் மீண்டும் ஒரு உயிரை உருவாக்கி வாழ்வாங்கு வாழும்
    இந்த முனைப்பின் பெயரென்ன?
இதை மனநல அறிவியலார் life instinct என்கிறார்கள்.
வேதங்கள் இதை ஒரு அக்னியின் வெளிப்பாடாக

VAISHVANARA, THE UNIVERSAL SELF

என்று சொன்னது …

தீராத வாழ்வின் தாகம்
மாறாத காதலின்  மோகம் 
யுகம்யுகமாகத்  தொடரும். இந்த  வேகம்..
இதுதான்  கடவுளோ…
காதல், அன்பு, மோகம்,  பாசம், பந்தம்,  கருணை,  காருண்யமா 
என்ற  அத்தனையும்  மொத்தமாக பிடித்து  வைத்த  ஒரு  சக்தி  ஒரு  உந்துதல்.
,

MAY 1 2016

இயற்கை
அம்மாவையே பேசுகிறது
சூர்யன்
பூமியின் தாய்
தனது வெப்பத்தையே
அதற்கு
உணவாக ஊட்டுகிறது
இரவில்
கடலின் சங்கீதம்
பறவைகளின் வேதகாளம் கேட்டுப் பிரபஞ்சம் துயிலுறும் வரை
அதைச் சூரியன் பிரிவதே இல்லை
இந்தப் பூமியோ
தாவரங்களின் தாய்
அவற்றை உற்பத்தி செய்கிறது
ஊட்டுகிறது உணவாகிறது
பழங்களுக்கும்
விதைகளுக்கும்
மரங்களும்
பூக்களும்
தாயாக ஆகின்றன…
அவளோ முன்மாதிரி
அவளே சாசுவதமான ஆன்மா
அவள் அன்பும் அழகும் ததும்புபவள்…

அன்புள்ள  அம்மா….

மனித இனத்து  உதடுகளின் 
அழகிய  வார்த்தையே  அம்மா
 அம்மா  என்றழைப்பதே 
அனைத்தையும்  விட  அழகு
அது
அன்பும்  நம்பிக்கையும்  நிறைந்த  வார்த்தை….
      ஆழத்திலிருந்து பூக்கும்
அன்பும் நேசமும்
தித்திப்பும் திகழும் வார்த்தை
அவளே எல்லாமும்
அவளே ஆறுதல் நம் சோகத்தில்
அவளே நம்பிக்கை நம் துக்கத்தில்
அவளே சக்தி நம் பலகீனத்தில்..
அன்புக்கு 
கருணைக்கு
இரகத்திற்கு
மன்னிப்புக்கு
அத்தனைக்கும் அவளே ஆதிமூலம்
தாயை இழப்பவன்
தன்னை ஆசிர்வதித்துக்
காவல் காத்த ஒரு தூய ஆன்மாவையே இழந்து போகிறான்….

கிப்ரன்

APRIL 30 2016

ஆன்மிகம் மதம்                    

கற்பிக்கின்ற வானுலக நரகத்தை விட

 கேவலமான நரகத்தை
 இங்கு இன்று இப்போது
இந்தப் பூவுலகில் ஒரு நரகத்தை 
நாம் படைத்து வைத்திருக்கிறோம்
நமது முட்டாள்தனமான
     சிந்தனைகள் பழக்கங்கள்
இவற்றால்
நமக்கு நாமே தப்ப முடியாத
ஒரு சிலந்தி வலை பின்னி
அதில் நமது விதியை நாமே நிர்ணயத்து விட்டோம்

குறள் நெறி ஆண்டவன்

INSPIRED by திருக்குறள் 
ஆனாவில் தொடங்கும் உலகின் மொழி எல்லாம்                     
ஆண்டவனில் தொடரும் உயிரின் வாழ்வு எல்லாம்
கல்வி கற்றதனால் என்ன பயன் கடவுளை வணங்காமல்
செல்வி பெற்றதனால் என்ன பலன் கருணை வழங்காமல்
நிலத்திலே நீண்டு வாழ வேண்டுமானால் குணத்திலே அவனை நாடு 
துயரிலே மீண்டு வாழ வேண்டுமானால் மனத்திலே அவனை தேடு
விருப்பு வெறுப்பில்லாத இறை சேர்ந்தவர்க்கு இன்ப துன்பமில்லை
இனிப்பு கசப்பில்லாத இணை சார்ந்தவர்க்கு இறப்பு பிறப்புமில்லை
புலன் வழி போகும் பொய் ஒழுக்கம் போக்குவோம்
பொறி வழி போகாத மெய் ஒழுக்கம் போற்றுவோம்
உவமையில்லாதவன் பாதம் பணிந்தவர்க்கு கவலையேது
பெருமைநிறைந்தவன்  தாள் வீழ்ந்தவர்க்கு துயரமேது
அறத்தில் சிறந்த ஆண்டவன் துணையிருக்க பிறவிப்பணியேது
அன்பினில் கனிந்த அன்பனாவன் அருகிலிருக்க மரணபயமேது
தலைவனை வணங்காத தலை பார்வையில்லாத விழியே 
இறைவனை பணியாத இதயம் இரத்தமில்லாத இழிவே
இறைவன் பாதம் பற்றியவர் பிறவியெனும் பெருங்கடல் நீந்துவர்
தலைவனவன் தாள் பணியாதவர் 
துயரெனும் ஆழ்கடல் மூழ்குவார்
இறையெனும் பொருள் புரிந்தவர்க்கு
இருளும் துயரும் இல்லை
மறையெனும் அருள் அறிந்தவர்க்கு 
பிணியும் பிறப்பும் இல்லை

APRIL 28 2016

கணிதத்தின் 
ஒரு எண் விடையாக அடைய
பலகோடி விதமான
படிகள் உள்ளன
   4  + 3=7
   2   +5=7
   14_7=7
இப்படிக் கோடான கோடி பாதைகள்..
அதே போல 
 காலக் கணிதமான
வாழ்விலும்
மக்களின் இலக்கு
இலட்சியத்தை அடைய
கொள்கைகள் 
இயக்கங்கள்
பாதைகள் 
மார்க்கங்கள் பலகோடி 
சில நன்மையானவை
பல தீமையானவை
எனது வழி சரி உனது வழி தவறு
என் ஆணவப் போராட்டங்கள் பல
இலக்குப் எவ்வளவு முக்கியமோ
அதை அடையும் பாதையும் முக்கியமானது 
என்றார் மகாத்மா

APRIL 26 2016

மெய்யை
மெய் என்று கொள்ளாத
மெய் ஞானியரும்
மெய்யை
பொய் என்றே புரியாத
பொய் ஞானியரும்
கலந்து மகிழ்ந்து விளையாடும்
எம் தேசம்…

004 QUOTES from PURANANOORU,

மருந்தில்லாத நோய் தரும் கூற்றம் என வெகுண்டு செல்கிறான் பகைநோக்கியே

மலையிலிருந்து மர்க்கடல் நோக்கி நில வழி ஓடும் ஆறென இரந்து உனைதேடி வருவார்

தம்மைப் பிழைத்தோரையும் பொறுக்கும் செம்மல்
அறம் என்றால் திற மறம் என்றால் போராடு
 அறமும் மறமும் அல்லாது கதவு அடைத்தல் நாணத்தக்கது
இருவர் பிறப்பும் வேறு அன்று
ஒருவர் தோற்பினும் தோற்பது நம் குடியே

003 QUOTES from PURANANOORU,

உறவு என நீதி தவறாதே
பிறர் என அநீதி சொல்லாதே
ஞாயிறென வெந்திறல் ஆண்மை திங்களென தண் பெருங்கருணை வேண்டும்
வானத்தென வண்மையும் வேண்டும்
அங்கு விசும்பின் ஆரிருள் அகற்றும் வெங்கதிர் செல்வன் போல
கீழ் திசைத் தன் கதிர் மதியம் போல நின்று நிலை பெறும் உன் புகழே
கழனியை கவர்ந்தாலும் ஊரை எரித்தாலும்
பகையை கொன்றாலும் பசுமரத்தை வெட்டாதே

002 QUOTES from PURANAOORU

நீர் மிகின் சிறையும் இல்லை
தீ மிகின் நிழற்றும் நிழலும் இல்லை
வளி மிகின் வலியும் இல்லை
ஒளி மிகின் இருளும் இல்லை
செம் புற்று பிறந்த ஈசல் போல ஒரு பகல் வாழ்வும் இல்லை
புலி அஞ்சும் குகை போல ஆடு பகை வலி அஞ்சும் அவன் நாடு
நாற் படை சிறப்பினும் நன்நெறி முதலே அரசின் ஆட்சி

001 QUOTES from PURANANOORU

இளையது என்றாலும் அரவு அஞ்சும் இடி மின்னலுக்கே

பூட்கை இல்லோன் யாக்கை போல புல்லென்ற பேர்களே

உடும்பு உரித்ததென என்பு எழ உடலில்
கடும் பசி களையுநர்க் காணாது வாடும் உயிர்களே

விறகு தேடும் மக்கள் பொன் பெற்றன்ன
தலைப்பாடு அன்று அவன் ஈகை

அறன் நிலை திரியா அன்பின் திறன் இல்லா ஒருவன் 
முறை திரிந்து மெலி கோல் செய்வான் 

APRIL 25 2016

சங்கம் என்றால் கூடுதல்
சங்கமம் என்றால் இரண்டறக் கலத்தல்
மனதில் நிறையத்துளைகள் இருக்கின்றன
மனம் நிரம்புவதும் 
கொட்டிப் போவதும்
எப்போதும் நடந்து கொண்டேயிருக்கின்றன
அறிவுதான் மனிதன் உணவு 
மனம் அறிவின் மீது வளர்கிறது
அறிவைத் தேடி மனம் ஓடுகிறது
ஏதோ ஒருநாள் உதவும் என்று சேர்த்து வைத்துக் கொள்கிறது
அப்படிப்பயன்படும் நாள் வரப்போவதே இல்லை…

APRIL 24 2016

படித்ததில் பிடித்தது

பிணத்தைச் சுற்றி வட்டமிடும் கழகுகள போல கவலைகள் அவன் கழத்தைச் சுற்றி மொய்க்கின்றன

கன்னியவள் கன்னத்து மச்சம் போல  மலை நடுவே அவன் கோட்டை இருந்தது…
பொன் மூட்டை முதுகெலும்பு ஒடிக்க
பொதி சுமக்கும் கழுதையாய் துன்புற்றான்…
துக்கத்தை தூக்கத்தை தனிமை
சிரித்து பழிக்கும் செல்வம்
இன்பத்தின் சமாதியாய் எழும்பிய மாளிகை..
முதுகுக்கு பின்னால் வசைபாடும் அடிமைகள்….
பொன்னிற்கு உடலை விற்கும் அழகிகள்…

APRIL 23 2016

ஒரே ஒரு நாள் வாழும் 
      மலரின் புகழ்
ஒரு நூறு ஆண்டு வாழ்ந்த
      மனிதனுக்கு இல்லையே
இரைக்கத்தானே பிறந்தோம்
அதுவரை 
இரக்கத்தோடு வாழ்வோம் 
பிறக்கும் போது 
       கையை மூடிக் கொண்டே பிறந்தான்
கையை மூடிக் கொண்டே பிறந்தான்
இறக்கும் போது 
கையை திறந்து வைத்தே இறந்தான் 
மானுடன் இவன்
இறைவன் கொடுத்தனுப்பிய செய்தி ஒன்றை
இங்கே விட்டுச் சென்றான்.
அது என்ன ?
நீ இங்கே இருந்து 
       எதையும் எடுத்துச் செல்ல முடியாது
ஆனால் இறைவன் 
           கொடுத்தனுப்பிய ,
அன்பை விதைப்போம் 
ஆனந்தத்தை வளர்ப்போம் 
கருணையை பரப்புவோம் .
இறந்தாலும் நாம் வாழ முடியும் 
                 நினனவுகளாக
நிழலாக மாறி புகைப்படத்தில் உறைந்தாலும்
        வாசம் வீச முடியும் 
         நல்ல வாசகங்களைத் தந்து போனால்…
மறக்க முடியாத மானுடனாக வாழ்ந்து வைப்போம் 
மலர்கள் போல, மறைந்தாலும்        
நினைவிலே இனிப்போம்…

மனிதன் என்பவன் 

      வலது/இடது பக்கம் என்று இருபக்கம் உள்ளவன்
 மேற்பார்வைக்கு,
ஆனால் ஊடுருவிப் பார்த்தான் 
      உடல் / மனம் என இருவேறு பாகங்கள் உள்ளவன் 
இவை இரண்டின் தேவைகள்
       நேர் மாறனவை
மனம் என்பதை ஆன்மா என ஆன்றோர்கள்.
உடலுக்கு உடலின் தேவைகளுக்கு
மனி, செல்வம் ,பொருள் அத்தியாவசயமாகிறது
உணவு, உறக்கம் , உறைவிடம் , உறவு
என்பது மானுடப்பரிமை வளர்ச்சியின்
     மிகவும் கிடைக்காத பொருளாகி விட்டது..
பூமி என்பது இறைவனின் சமையல் கூடம்
இங்கே பிறக்கின்ற அத்துனை சீவன்களுக்கும் உணவு உண்டு.

ஒரு பக்கம் 

      செல்வம் மனிதனை மிருகத்திலும் இழிவாக கீழே இறக்கியது
மற்றொரு பக்கம் 
   கல்வி மானுடத்தை இறைவனின் நிலைக்கு மேலே உயர்த்தியது
இந்த இருவேறுபட்ட காந்த சக்திகள் 
   இருபக்கமும் நேரெதிராக    இழுக்கின்றன.
தெய்வீக குணங்கள் அதிகமாக அதிகமாக
    மனிதனை மேம்படுத்துகின்றன
அப்படிப்பட்ட மானுடர்கள்  நிறைந்த 
    குடும்பங்கள், குழுக்கள் தேசங்கள்
மகிழ்வோடு மன நிறைவோடு வாழ்கின்றன
மிருக குணங்கள் நிறைந்த மானுடர்கள்      பேராசை , போட்டி , பொறாமை , கபடு , சூது போன்ற
கீழ்த்தரமுள்ள மானுடராக மாறிவிடுகின்றார்கள் 
அவர்களால் நிறைந்த இடங்கள்
சத்தம், யுத்தம் , ரத்தம் என சிந்தி சிதறி சிதைக்கின்றன

மனிதன் மட்டும் மணியை பேப்பரில் அச்சடித்து 

அது கிடைக்காத பொருளாக்கி விட்டான்.
ஆனாலும்  இதே மானுட குலத்தின்  
      தனது இரண்டாவது மூலத்தை மனிதனுக்குள் இருக்கும்
மணியை மறந்து துறந்து தன் என்ற பாகத்தை மட்டும் 
   கண்டறிந்து தன்னைத் தானே உணர்ந்து 
அதற்கு ஆத்மா எனப் பெயரிட்டார்கள்
அதை சீவாத்மா , பரமாத்மா என பங்கிட்டார்கள்.
       அது ஆன்மீகம் 
என்ற பெரிய வளர்ச்சி தந்தது 
அது பிறகு கலைகள் , இலக்கியம் , தத்துவம் ,
என பலப்பல கிளைகள் பரப்பியது.
தங்களுக்குள் போட்டி போட்டு
ஒன்றை ஒன்று பாதுகாத்தது.
ஆனால் மொத்தத்தில் கிளைபரப்பி செழித்து வளர்ந்தது

கல்வி, களைகள் ,  இலக்கியம், ஆன்மீகம்

போன்ற அனைத்து இயக்கங்களின் 
ஒரு முகப்பட்ட நோக்கம்
மானுட மனதின் ஆழமான வயல்களில்
நற்குணங்களின் விதைகளை விதைப்பதாக இருக்க வேண்டும்
அறிவியல் , வேலைவாய்பு, பொருளாதார முன்னேற்றம் 
போன்ற தூண்டுதல்களை
வெறியாக வளர்த்து விடக் கூடாது .
இதில் பெற்றோர் , ஆசிரியர் , நண்பர், ஊடகம்
மற்ற எல்லோருடைய பங்கும் கடமையும் உள்ளது
ஆனால் நாம் மாறுதலாக நடந்து ,
      நச்சுப்பயிர் வளர்ந்த பின்னே
      வீடு சரியில்லை
       நாடு நாடு சரியில்லை 
             என்று புலம்பி அழுவது வீண்தானே?

மலரின் முகத்திலும் 

மலர்ந்த முகத்திலும்
விழித்தால் அன்று மகிழ்ச்சிக்கு குறைவில்லை
சிரிக்காத சீரழிவாய்
பொம்பளை சிரிச்சா போச்சு
புகையிலை விரிச்சா போச்சா
சிரிப்பவன் பைத்தியம் 
சிரிக்காத எரிச்சலாக வருகிறது…
உள்ளே இருக்கும் கசப்பத்தானே
வெளியே நிரம்பி வழிகிறது
இது ஒரு தவறான அனுகுமுறை…
எங்கெங்கும் இது தவறான அனுகுமுறை…
எங்கெங்கும் இது நடக்கிறது
பிறந்த குழந்தையிடம் இருந்து
பிரதம மந்திர வரை இது அமல்படுத்தப்படுகிறது.

சிரிப்பவர் சீரியசாக இருப்பதில்லை

மகிழ்ச்சிக்கு  கடமைக்கு இடைஞ்சல்
இதுவெல்லாம் ஒரு காலாவதியாகிப்போன தத்துவம்.
மலர்களை நமக்கு பிடிப்பதன் காரணம்
இயற்கையின் சிறந்த படைப்பு
வண்ண வண்ண உடை உடுத்தி 
வாசங்களில் மகிழ்ச்சி பரப்பி 
விரிந்த இதழ்ககளால் மலர்ந்து சிரித்து 
ஒளி தரும் உணர்வு தரும் 
வைப்ரேசன்ஸ் என்று சொல்வார்களே
அந்த மகிழ்ச்சியை அதிர்வலைகளைப் போல
பரப்புவதே மலர்களே…
அதற்குப்பிறகு குழைந்தைகள்..
       அதிலும் இளம் பிராயத்து விடலைப்பிள்ளைகள்
அவர்களை வளர்க்கின்றேன் பேர்வழி என்று 
பேசாதே
சிரிக்காதே
விளையாடதே
என்று கிட்லர் மீசை வைத்துக் கொண்டு
மாடு மேய்க்கும் குச்சியைக் கையில் வைத்து
பெற்றோரும் 
ஆசிரியரும்
காவலரும் மனிதரை மிருகமாக வளர்த்து ஆளாக்கி விட்டார்கள்
கோவிலாகட்டும் அலுவலமாகட்டும் 
மருத்துவமனையாகட்டும்
எங்கெங்கும்  இந்த கொடும் கோல் ஆட்சி நடக்கிறது
குச்சியை போட்டாலும் 
முகத்திலே சிங்கம் புலி போல உறுமுவது மாறவில்லை
மந்தியாக குக்கலாக குறைப்பதும் முறைப்பதும் வரைப்பதுவும் தீரவில்லை

மனிதம் மலரட்டும் 

மனங்கள் சிரிக்கட்டும் 
முகங்கள் பூக்கட்டும்
மொழிகள் குழலுதட்டம்
மகிழ்ச்சி கரை புரண்டால் 
நமக்கு மட்டுமல்ல சுற்றியிப்பவரையும்
  அது சூழ்ந்து கொள்ளும் .
உணவு , உடை,உறைவிடம் , உறவு
என உயர்ந்த அந்தஸ்களாலும்
மகிழ்ச்சி என்ற உணர்வை நிரப்பி விட முடியாது
 
கருத்தரித்த நாளில் இருந்து எருவில் எரியூட்டும் நாள் வரை
கடுமை , கோபம் , வன்முறை தவிர்ப்போம்
நாமும் மகிழ்வோடு மலர வைப்போம்…

APRIL 22 2016

அறம் அது மிருகத்தை மனிதமாக்கும் எண்ணமும் செயலும்…
அது அவரவர்க்கு இயன்ற வரையில் முயற்சி செய்கிறார்கள்.
   அவரவர் குணநல சுபாவங்கள் மற்றும் குடும்ப ரீதியான 
தாக்கங்களால் இது செயல்படுகிறது.
    ஆகக் குறைந்த பட்சமாக கணவன் மணைவி, குழந்தைகள்        
உழைப்பு, சேமிப்பு குழந்தைகளின் எதிர்கால வாழ்வு என்ற என்ற சிறிய
வட்டத்தில் சுழலும் அடிப்படை வளையம் குடும்பம். 99.99. சதவீத
மக்கள்  பிறவிகளின் இயல்பான வாழ்வு இல்லறம்.
     இயலும் போதெல்லாம் மற்ற அறப்பிரிவுகளில் வாழ்வு இல்லறம்.
      இயலும் போதெல்லாம் மற்ற அறப்பிரிவுகளில் வாழ்பவர்களுக்கு
தனது இல்லறத்தில் இருந்து பிறழாமல்
சேவை செய்கிறார்கள் இவர்கள்.
இறைவன் நம்மை குழந்தையாக படைக்கும்  பொழுது 
அழகான வெள்ளைக் காகிதம் போல தூய்மையாக பிறக்கின்றான்
  அதில் நாம் ஒரு ஓவியனைப் போல நமது
அழகான நேரான நேர்மையான
ஒழுங்கான ஒழுக்கமான
நுட்பமான  பயனுள்ள 
அந்த  குணாதியங்கள்  எனும்  கோடுகளால்  இந்த பிறவி
அழகான ஞாயமாக  வரையப்படுகிறது. 
மறதாக  தறிகெட்டு ஓடும் வாழ்வினால்
தடுமாறி  தடம்மாறி
ஒழுக்கமில்லாத கோணல் மானலான
கோடுகளால் சிதைந்த ஓவியமாகிறது இழிபிறவிகள்

 பிறப்பிலே இறுகிப்போன 

  கட்டி தட்டிய பாறைதான் மிருககுணமுள்ள மானுடன்
பெற்றோர் 
ஆசரியர் 
ஆன்றோர் 
அன்புள்ளவர்களின் 
முயற்சிகளால் 
பயற்சியெனும் கூளி கொண்டு 
செதுக்கி  
அழகான  மானுட சிற்பத்தை உருவாக்கி
கோவிலில் விக்ரமாக 
மகாத்மாவாக வடிவாக்கி வழிபடுகிறார்கள் 
உளியை உடைத்த 
பாறைகள் 
சிதைந்தது போன
மூளிகளாக அவமானச் சின்னகளாகின்றன

APRIL 21 2016

கடந்த கால வலிகளும்,இரணங்களும்
ஆழமான தழம்புகளாக அல்லல் தருகின்றன..
நேற்றைய நினைவுகள்,வறுமைகள்,பசிகள், பட்டினிகள்
இதயத்தைஇறுக்கிப்பிழிகின்றன..
இறந்த கால அவமானங்களும்,தோல்விகளும்
ஆறாத காயங்களை மனதை துயரைச் சேற்றினிலே முக்கி எடுக்கின்றன
நிகழ்காலம் நிதர்சனமாக
டைனோசராக,பூதாகரமாக எதிர்த்து நிற்கின்றன
எதிர்காலம் தூரத்து இடி முழக்கமாக
 இதயத்தை அச்சுறுத்தி நடுங்க வைக்கிறது         
                
இந்த அழுத்தங்களின் விளைவுகள்,
இந்த உடல் வலி,மனவலி,பொருளாதார வலி
என ஆயிரமாயிம் துயரங்கள் நமக்கு சவால் விடுகின்றன
அந்தச் சவாலைச் சமாளிக்க மனிதன் மனம்
திட்டம் தீட்டுகிறது….
தன் உலை கொதிக்க ஊரை அடித்து உலையில் போடுகிறது
ஆசைகளை வளர்க்கிறது… இமயத்தையும் தாண்டி சூர்யனையும்
           கையில் பிடிக்க ஆசைப்படுகிறது.
ஆகவே ஆசைகளுக்கு காரணமே துயரம்தானே புத்தனே…

APRIL 16 2016

கடவுளைடைய முகவரியை யாரும் தர முடியாது
எல்லா முகவரிகளுமே 
தப்பான முகவரிகள்தான்
உனக்குள் இருக்கிறார் அவர்

தத்துவமஸி
அகம்  பிரம்மாஸி

APRIL 19 2016

ஆதித்யன் 
   காதல் ஒரு போதும் ஓய்வதில்லை?
சந்திரகாந்தா
காதல் தேய்கிறது … வளர்கிறது…
இல்லையடா …  அது
ஊடலின்  ஒரு நாடகமடா ….

APRIL 18 2016

கடிகாரம் 

கால்களில் இரண்டில் ஒன்று
ஊனமானதுதான் …. ஆனால்
      ஓடி ஓடி  உழைக்கும்
ஆர்வமும் ஒரு போதும்  ஓய்ந்ததுமில்லை….

APRIL 20 2016

நாம் பிழைக்க வழிகள் கண்டறிந்தோம்
ஆனால் நாம் ” வாழ” ஒரு வழி கண்ணோட்டமில்லை
we have added year to life
we have not added life to years
                                  
நாம் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கின்றன
ஆனால் அதில் உயிரோட்டம் அதிகரிக்கவில்லை

we have added year to life
we have not added life to years

we have learnt how to make a living 
                           but not a life
நாம் பிழைக்க வழிகள் கண்டறிந்தோம் 
ஆனால் நாம் “வாழ” ஒரு வழி கண்டோமில்லை
நாம் விலை உயர்ந்த பொருள்களால் வீட்டை நிரப்பினோம் 
மதிப்பு மிகுந்த பொருளுள்ள உறவுகளை 
        வீட்டை விட்டு விரட்டினோம்
அன்பெனும் அமுதம் வற்றியது இதயத்தில்
ஆத்திரமெனும் அமிலம் வழிகிறது குவலயத்தில்

APRIL 17 2016

மேகங்கள்  சூழ்ந்தது
பூமியின் காதலுக்காக 
காகங்கள் சூழ்ந்தது  
உறவுகளின் பாசத்துக்காக

APRIL 15 2016

விளையாட்டு என்பதற்கும்
வெற்றி என்பதற்கும்
வித்தியாசம் இருக்கிறது
விளையாட்டுக்குக் கூட 
ஒரு நோக்கம் இருக்கிறது
முடிவை ஏங்குகிறது 
இலக்கு இருக்கிறது
வெற்றிக்கு ஆசையிருக்கிறது
போட்டியாகிப் போகிறது
பதட்டமாகிப் போகிறது
வளர்ந்தவர்கள்
போட்டிக்காக விளையாடுகிறார்கள்
வளராத குழந்தைகள்
வெறுமனே விளையாடுகிறார்கள்
விளையாட்டே போதுமானது
அவர்களுக்கு நோக்கமில்லை
இலக்கு எதுவுமில்லை
அது போல வாழ்க்கை ஒரு அனுபவம்
விளையாட்டாக விளையாடு

APRILl 14 2016

வளர்ச்சி என்பது வேறு
முன்னேற்றம் என்பது வேறு
வளர்ச்சி என்பது நிகழ்காலத்தை அடிப்படையாகக் கொண்டது
முன்னேற்றம் என்பது 
எதிர் காலத்தை அடிப்பையாகக் கொண்டது
வளர்ச்சி என்பது வாழ்வதால் வருவது
முன்னேற்றம் என்பது தியாகத்தால் வருவது
வளர்ச்சியில்லாத வாழ்வும் 
வெறும் முன்னேற்றமும் தற்கொலைதான்…..

APRILl 13 2016

பல லட்சம் ஆண்உயிரணுவிலே போட்டி போட்டு வென்ற ஒன்று பெண் உயிரணுவைச் சேர்ந்து கருவாகி உருவாகிபிறந்து வளர்ந்து இறந்து மறைந்து போகும்முன் மீண்டும் ஒரு உயிரை உருவாக்கி வாழ்வாங்கு வாழும்
இந்த முனைப்பின் பெயரென்ன?

இதை மனநல அறிவியலார் life instinct என்கிறார்கள். வேதங்கள் இதை ஒரு அக்னியின் வெளிப்பாடாக வென்றாவரா என்று சொன்னது …
தீராத வாழ்வின் தாகம்
மாறாத காதலின்  மோகம்
யுகம்யுகமாகத்  தொடரும். இந்த  வேகம்..
இதுதான்  கடவுளோ…
காதல், அன்பு, மோகம்பாசம், பந்தம்கருணைகாருண்யமா
என்ற  அத்தனையும்  மொத்தமாக பிடித்து  வைத்த  ஒரு  சக்தி  ஒரு  உந்துதல்.
நேர்  மாறாக  அதனுடன்  நிழல் போலே ஒட்டிப் பிறந்த உள்ளே  ஒளிந்திருக்கும்,
ஆக்க சக்திக்கு எதிரான அழிவு சக்தி….. பெயரென்ன?
இதை death instinct 
என்று சொன்னார்கள் 
வேதங்கள் இதை
சனி
சாடர்ன்
சைத்தான்
நாகம்
நஞ்சம்
எல்லா மதப்புராணங்களும் 
அதை நஞ்சம்உள்ள நாகமாக 
உருவகப்படுத்துவது ஒரு அழகு, ஆச்சர்யம்
இந்த இரு வேறு சக்திகளும் ஒரு
இணைபிரியாத யுத்தத்தில் பிரபஞ்சத்தில் பின்னிப்பினைந்துள்ளது.

ஆனால் ஆச்சர்யமாக ஒரு குழந்தை
பருவ இராசயனங்களில்…
மூழ்கும் வரை 
இந்த எதிர் சக்தி 
அழிவு சக்தி 
மிகமிக குறைவாக காணப்படுகிறது. 

APRILl 12 2016

கடவுள்  என்பவன்
சூர்ய, சந்திரன் , நட்சத்திரங்கள்,
கடல்,பூமி, மலர்
என எல்லாம் படைத்தான்….
அழகழகாக இருந்தது
தவறுதலாக
மனிதனைப் படைத்தான்
எல்லாம் அசிங்கமாகி விட்டது…
வெறுப்பிலே
இவனிடமிருந்து தப்பித்துக்கொள்ள,
எங்கே போவது? என ஒரு ஞானியைக் கேட்டார்…
எவரெஸ்ட் போங்கள் என்றார் ஞானி,
அங்கே டென்சிங் வந்து கண்டுபிடித்து விடுவானே ?
எங்கே போனாலும் இவன் வந்து விடுவானே என்றார் கடவுள்,
ஞானி இரகசியமாகக் காதில் சொன்னார்,
நீங்கள் அவனுக்குள்ளே போய் ஒளிந்து கொள்ளுங்கள்,
ஊரெல்லாம் தேடுவாள்,
உள்ளே தேடமாட்டான் , ஏனென்றால் அவன் முட்டாள்.
ஞானி சொன்ன மாதிரியே ,

கடவுள் மனிதனுக்குள் ஒளிந்து கொண்டார்

APRILl 11 2016

வாழ்வின் பொருள் இல்லைதான்
             (அர்த்தம்)
ஆனால் உன் வாழ்வுக்கு
    அர்த்தம் இல்லாமல் போய்விடக்கூடாது
நீ பூமியில் கருவுற்ற போது
      உனக்கு பெயரில்லை
       உனக்கும் பெயரை வைத்தவர் பெற்றோர்
நீ வளரும் வாழ்விலே அர்த்தமில்லை
    ஆனால் அதை அர்த்தமுள்ளதாக
ஆக்க வேண்டியது உனது பொறுப்பு
மனதில் நிறையத்துளைகள் இருக்கின்றன
மனம் நிரம்புவதும்
கொட்டிப் போவதும்
எப்போதும் நடந்து கொண்டேயிருக்கின்றன
அறிவுதான் மனிதன் உணவு
மனம் அறிவின் மீது வளர்கிறது
அறிவைத் தேடி மனம் ஓடுகிறது
ஏதோ ஒருநாள் உதவும் என்று சேர்த்து வைத்துக் கொள்கிறது
அப்படிப்பயன்படும் நாள் வரப்போவதே இல்லை…

தெரிந்துக் கொள்ளத் தெரிந்து கொள்ள வேண்டும்

APRILl 10 2016

சங்கம் என்றால் கூடுதல்
சங்கமம் என்றால் இரண்டறக் கலத்தல்
மொழி சிலவற்றைப்பற்றிச் சொல்லி விடும்
ஆனால்
எல்லாவற்றையும் சொல்லி விட முடியாது
உண்மை எதுவென்று
மொழியால் சொல்லிவிட முடியாது
ஆனால்
எது எல்லாம்
உண்மையல்ல என்று சொல்லலாம்
அதை எல்லாம்
உரித்துக் கொண்டே போனால்
ஒரு நாள் உண்மை வெளிப்படும்
ஆனால்

அதை மொழியால் சொல்ல முடியாது.